தல சிறப்பு

இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் வீற்று அருள்பாலிக்கும் திருமலைராயப்பெருமாள் தென்பகுதியில் தலையை வைத்தும், வடக்குப்பக்கம் காலை வைத்தும் கிழக்கு நோக்கியபடி சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இவருக்கான உற்சவர் ஊரின் மையத்தில் உள்ள கோயிலில் அமைந்துள்ளார். சுற்றுப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், நவக்கிரகம் மற்றும் விநாயகருக்கென தனிச்சன்னதிகள் உள்ளன. இத்தலவிநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் எண்ணி மனம் உருகி வேண்டும் காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கும். சகல பிரார்த்தனைகளும் நிறைவேறும். தொழில் விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.